tamilnadu

img

உலகளவில் 11,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை

உலகளவில் உள்ள 11,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து பூமி பருவநிலை அவசரநிலையை எதிர்கொள்கிறது என எச்சரித்துள்ளனர்.

உலகில் உள்ள 153 நாடுகளில் இருக்கும் 11,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஒரு ஆய்வறிக்கை ஒன்றை பயோசின்ஸ் என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதில் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள், மோசமான துன்பத்தை தவிர்ப்பதற்குத் தேவையான முயற்சிகளின் அளவை அரசாங்கங்கள் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். 

அந்த அறிக்கையில், கடந்த 40 ஆண்டுகளாக அறிவியல் ஆதாரத்தை கொண்டு விஞ்ஞான சமூகம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையிலும், வாயு மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்காணித்து வரும் அரசாங்கங்களால் போதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு பெரிய அச்சுறுத்தல் குறித்து மனிதகுலத்தை எச்சரிக்கும் மற்றும் உள்ளதை உள்ளபடி கூற வேண்டிய தார் மீக கடமை விஞ்ஞானிகளுக்கு உள்ளது. கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், பூமி பருவநிலை அவசரநிலையை எதிர்கொள்கிறது என்பதை தெளிவாகவும், ஐயப்பாட்டுக்கு இடமின்றி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிசக்தி பயன்பாடு, மேற்பரப்பு வெப்பநிலை, மக்கள்தொகை வளர்ச்சி, நிலம் அழித்தல், காடழிப்பு, துருவ பனி அதிகரிப்பு, கருவுறுதல் விகிதங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கார்பன் மாசு போன்ற 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்கக்கூடிய தரவுகளின் அறிவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.