திண்டுக்கல், ஜூலை 4- திண்டுக்கல் தற்காலிக காய்கறி மார்க்கெட். தொற்று பர வும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சுகாதார நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் நகர் செயலாளர் பி.ஆசாத் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை:- திண்டுக்கல் காந்தி மார்க்கெட் டில் இயங்கி வந்த காய்கறி சந்தை கொரோனா பரவல் காரணமாக எம்.வி.எம். அரசு பெண்கள் கலைக் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கல்லூரி வளாகம் கொரோனா தனிமை வார்டாக மாற்றப்பட்டது. காய்கறி சந்தை நத்தம் சாலையில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்தில் செயல் பட்டு வருகிறது. தற்காலிக மார்கெட் டுக்கு வரும் மக்களுக்கு கிருமி நாசினி தருவதில்லை. வாடிக்கை யாளர்கள் தனி மனித இடைவெளி யை கடைப்பிடிக்கவில்லை. ஒவ் வொரு காய்கறி கடை முன்பாக வும் கூட்டம் அலைமோதி நிற்கிறது. கடை உரிமையாளர்கள், சுகாதா ரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வ தில்லை. தற்காலிக காய்கறி மார்க் கெட் சென்னை கோயம்பேடு போல கொரானா தொற்று பரப்பும் இடமாக மாறியுள்ளது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலர் மாறுதலாகி இரண்டு மாதத்திற்கு மேலாகியும் புதிய நகர் நல அலுவலர் நியமிக்கவில்லை. தொற்று பரவும் காலத்தில் பொறு ப்பு அதிகாரியை வைத்துக் கொண்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிரமங்க ளை ஊழியர்கள் சந்திக்க வேண்டி யுள்ளது. திண்டுக்கல் மாநக ராட்சிக்கு நகர்நல அலுவலர் நிய மிக்க வேண்டும்.