tamilnadu

img

400 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

திண்டுக்கல், மே 19- மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டுக்கல் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி வேல் கொரானா கால நிவாரண உதவிகள் வழங்கினார். தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பகத்சிங் மாவட்டக்குழு உறுப்பினர் கோபி நாதன் ஆகியோர் அதைப் பெற்றுக் கொண்டு சாணார்பட்டி, ஆத்தூர், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்தி ரம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள 400 மாற்றுத்திறனாளி குடும்பங்க ளுக்கு வழங்கினார். மாவட்டச் செயலாளர் பகத்சிங், சின்ராஜ், ஆறுமுகவள்ளி, வனிதா, கண் ணன், ஒன்றியத்தில் சசிக்குமார், பஞ்சு, ஒன்றியத்தில் பழனிச்சாமி, கந்தசாமி ஆகிய நிர்வாகிகள் மாவட்டக் காவல்த்துறைக் கண் காணிப்பாளர் சக்திவேல் கொடுத்த நிவாரண உதவிகளை வழங்கினர்.  ஒட்டன்சத்திரத்தில் செயல் படும் மனிதம் நண்பர்கள் குழு அமைப்பினர் தமிழ்நாடு அனை த்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்துடன் இணைந்து ஆத்தூர் தாலுகாவில் சேடபட்டி, அழகர்நாயக்கனட்டி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, செம் பட்டி, பெருமாள் கோவில்பட்டி, வலையபட்டி ஆகிய இடங்களில் வசிக்கும் 120 மாற்றுத்திறநாளி களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.