tamilnadu

img

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தருமபுரி, ஜூன் 8- குடிநீர் கேட்டு தருமபுரி மற்றும் ஈரோடு  மாவட்டங்களில் பெண்கள் காலிக்குடங் களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கொளகம்பட்டி, ஒட்டர் பாளையம் கிரா மத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் குடிநீர் தேவைக்காக பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டி ருந்த மின்மோட்டார்கள் பழுதாகி உள் ளது. இதனால் இக்கிராம மக்களுக்கு குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒகே னக்கல் குடிநீர் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய கோரி ஊராட்சி நிர்வாகத்திடமும வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள்  காலிக்குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொளகம்பட்டி-அரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுகுமார், இரண்டு நாட்களில் புதிய மின் மோட்டார்களை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஈரோடு 
இதேபோல், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 37ஆவது வார்டு விவேகானந் தர் நகர் பகுதியில் கடந்த வாரம் 5 நாட் களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அதி காரிகளிடம் பல முறை அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் ஒரு ஆழ் துளை கிணறு மூலம் தண்ணீர் பிடித்து வந்து உள்ளனர். அதுவும் பழுதானதால் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற் பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்நிலையில் உடனடியாகத் தண் ணீர் வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு சென்னிமலை சாலையில் காலிக்குடங்க ளுடன் பெண்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருடமும், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். 

ஆக.15ல் தான் சீராகும்: அதிமுக எம்எல்ஏ

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவின் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், மாநகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அனை வருக்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் அடிப்படையில் அனைவரும் களைந்து சென்றனர்