tamilnadu

img

நலவாரிய குளறுபடிகளை போக்கிடுக முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 1- நலவாரியத்தில் உள்ள  குளறுபடிகளை போக்க வேண்டும் என வலியுறுத்தி முறை சாரா தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார் பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அனைத்து நலவாரியங்களுக்கும் சிஐடியு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நலவாரிய அலுவலகங்களுக்கு நிரந்தர ஊழியர் நியமிக்க வேண்டும். நிதி ஆதாரம் இல்லாத வாரியங்களுக்கு ஆண்டுதோறும் சமூக பாதுகாப்பு நிதியை முறையாக வழங்க வேண்டும். நலவாரிய செயல்பாடுகள் குறித்து மத்திய தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து ஒரே சீரான நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மாத பென் சன் ரூ.3 ஆயிரம் வழங்குவதுடன், பெண் களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியா ழனன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முறைசாரா தொழிலா ளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட கன்வீனர் ஜி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் பி.ஆறுமுகம், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜேந்திரன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் சி.ரகுபதி, தையல் சங்க மாவட்ட தலைவர் ஜெ.ஆரோக்கியதாஸ், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வெங்கடாச்சலம், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் ஏ.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.