tamilnadu

img

தனியார் பேருந்து பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 2- தனியார் பேருந்து பணியாளர்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தனியார் ஓட்டுநர், நடத்துனர் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் நடத்துனர்,ஓட்டுனர் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்குக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்றின் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாத காலமாக வாழ்வா தாரம் இல்லாமல் தவித்து வருகின்ற னர். மேலும், அரசு முறைசார உள் ளிட்ட பல்வேறு நலவாரியங்கள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பு சார தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் தனியார் பேருந்து பணியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட் சியரிடம் தனியார் பேருந்து தொழிலா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.