tamilnadu

img

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – அமைச்சர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தீபாவளி பண்டிகையின்போது மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.  

மேலும் சென்னையில் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருந்தும் பணி நடைபெற்று வருகிறது.  தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.