tamilnadu

img

தருமபுரி: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு!

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடந்த மார்ச் 8-ஆம் தேதி  மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த நிலையில், இன்று கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி கிராமத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் ஆண் காட்டு யானை ஒன்று இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.