தருமபுரி, ஆக.1- தருமபுரி புத்தகத்திருவிழாவில் அறிவுசார் கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதி யாக மக்கள் இசை தமிழிசை பாணர் புஷ்பவனம் குப்பு சாமி- அனிதா குப்புசாமி குழிவினரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தங்கம் மருத்துவமனை நிர்வாகி மருத்துவர் வே.தங்கம் செந்தில் தலைமை வகித்தார். ஆசிரி யர் ச.கவிதா வரவேற்றார். பரம்வீர் கல்வி நிறுவன நிர்வாகி ஸ்ரீ கணேசன், இ.ஆர்.கே.செல்வராஜ், வழக்கறிஞர் வெ. வீரசாமி, வாசுதேவன், கவிஞர் ஜி.சம்பத், ஆசிரியர்கள் வி.டி.முகிலன், ஹேமலதா ஆகியோர் பேசினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் மந்திரமா?, தந்திரமா? என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.