ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வைத்து வருகிறார். கடந்த ஆண்டு நகர் பகுதியில் அதிவேகமாகக் காரை இயக்கி காவல்துறையினரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். ஸ்பாட்டிலேயே வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வழக்கை உடனடியாக நீதிமன்றம் கொண்டு சென்றனர். செவ்வாயன்று இறுதி விசாரணை மேற்கொ ள்ளப்பட்டுத் தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பில்,”வார்னே 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிவேகமாகக் காரை இயக்கியது தொடர்பாக 6 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். அதனால் ஷேன் வார்னேவுக்கு ஒரு ஆண்டுக்கு வாகனம் ஓட்ட தடையும், ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது” என லண்டன் நகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.