இங்கிலாந்து - ஆஸ்தி ரேலிய அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் தொடர் இங்கி லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் லீட்ஸில் நடை பெற்றது. பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்டோக்ஸின் (135) அசத்தலான ஆட்டத் தால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரு விக்கெட் கையிலிருந்த நிலையில் இங்கி லாந்து அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. இமைகள் அசையா அந்த பரபரப்பான கட் டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் முட்டிப்போட்டு பவுண்டரிக்கு விரட்ட முயன் றார். கணிப்பு தவறவே பந்து ஸ்டோக்ஸின் காலுறையைத் தாக்கியது. உடனே ஆஸ்தி ரேலிய வீரர்கள் எல்பிடபிள்யூ (LBW) முறை யில் நடுவரிடம் (ஜோயல் வில்சன் - விண் டீஸ்) அவுட் கேட்டு குதித்தனர். ஆனால் நடு வர் எதுவும் கூறாமல் சிலையாய் நின்றார். டிஆர்எஸ் வாய்ப்பு இல்லாததால் நடுவ ரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்களின் கண்ணில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி நடுவரின் உதவியால் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேஸிங்கில் சொந்தமாக (362) வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை இங்கிலாந்து அணியோ,ஸ்டோக்ஸோ பறிக்கவில்லை. நடுவர் தான் பறித்து விட்டார்.நடுவர் முடிவு குறித்து ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.