இந்திய அணியின் கேப்டன் கோலி அதிரடியாக ரன் குவிக்கும் முனைப்பில் (65 பந்தில் 77 ரன்கள்) ஆமீர் பந்துவீச்சில் சர்பராஸ் அகமதுவிடம் கேட்சானார்.
ஆனால் உண்மையில் கோலி அட்டமிழக்கவில்லை. பந்து பேட்டில் பட்டதாக நினைத்து நடுவர் அவுட் கொடுக்காமலே தானாகவே வெளியேறினார். பந்து கோலியின் பேட்டை கடந்து சென்ற போது அதிர்ந்தது. கோலி பெவிலியன் சென்ற பின் அவரின் பேட்டை தோனி வாங்கி சோதனை செய்து பார்த்தார். அதன் பின் கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருக்கிறது. அதனால் சத்தம் வருகிறது எனத் தெரிந்தது. கோலியும் பேட்டை சோதித்து பார்த்த பொழுது சத்தம் வந்தது. இதனால் கோபம் அடைந்த கோலி பேட்டை தரையில் அடித்து உடைத்தார். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியானது.