மகளிர் கிரிக்கெட் பொறுத்தவரை இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 2 மடங்கு பலமானது. சொல்லப் போனால் இந்திய அணியின் முக்கிய வில்லனும் இங்கிலாந்துதான். உலகக்கோப்பை முதல் சாதாரண இருதரப்பு தொடர் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு பெரும் சவாலான செயலாக இருக்கும். இந்திய அணியை அடிக்கடி வீழ்த்தி பழக்கமான இங்கிலாந்து அணி, உலகக்கோப்பை டி-20 தொடரின் அரையிறுதி ஆட்டத்திலும் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியின் கனவை மழை பறித்துவிட்டது. அதிர்ஷ்ட வாய்ப்புடன் இறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் கூட வெற்றி துள்ளல் இல்லாமல் அமைதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் விடுமுறை
வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் உலகக்கோப்பை டி-20 தொடருக்கு ஓய்வு நாள்களாகும்.
சர்வதேச மகளிர் தினமான ஞாயிறன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.