பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் திங்களன்று தொடங்கியது. பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்ப நட்சத்திர வீரர் ஸ்மித்தின் (144) அசத்தலான சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 284 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. தற்போது இங்கி லாந்து அணி முதல் இன்னிங்ஸை விளை யாடி வருகிறது. தொடக்கம் முதலே அதிரடியும் ஆக்ரோஷத்திற்கும் குறைவில்லாமல் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள் ளது.
கடந்தாண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது பந்துவீச்சு சர்ச்சையில் தண்டனை அனு பவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகி யோர் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், உலகக்கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 2 ரன்களில் வெளியேறி னார். வார்னர் ஆட்டமிழந்ததும் அவரை கடுப்பேற்றும் விதமாக மைதானத்திலிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் உப்புத் தாளை (டேம்பரிங் பேப்பர்) வெகுநேரம் காண்பித்து வழியனுப்பினர். இதனைக் கண்ட வார்னர் சோகத்துடன் பெவிலியனை அடைந்தார்.இந்த விவகாரம் குறித்து வார் னர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய வீரர்களையும், ரசிகர்களையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களின் செயலால் வீரர்களிடையே மோதல் போக்கு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.