tamilnadu

img

கோவையில் புகையிலை விழிப்புணர்வு மராத்தான்!

கோவை,அக்டோபர்.19-  புகையிலை விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி இன்று காலை 6 மணியளவில் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் புகையிலை விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார் 
கோவை மாநகரைப் பொருத்தவரை புகையிலை ஒழிப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு மாரத்தான்  RUN FOR DRUG FREE COIMBATORE துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்  மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் பெண்களுக்கு மூன்று கிலோமீட்டர் தூரமும் ஆண்களுக்கு 5 மற்றும் 7 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது