வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!
பதினைந்து மணி நேரத்தில் இரண்டு அடிக்கு இரண்டு அடி வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம் உருவாக் கப்பட்டது. கோவை மாவட்டம், கருண்யா நல் லூர் வயல் பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் தனியார் பள்ளி விடுதி யில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஓவியம் மீது ஆர்வம் கொண்டதால் மரத் தூள்கள் காய் கறி, தானிய வகைகள் உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு ஓவியம் வரைந்து சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற் படாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில் லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலை யத்தில் 286 நாட்கள் தங்கியிருந்து கடந்த மார்ச் 18 ஆம் தேதி வெற்றிகரமாக பூமிக் குத் திரும்பினார். அவரது சிறப்பான சாத னையை அங்கீகரிக்கும் வகையில் பதி னைந்து மணி நேரத்தில், இரண்டு அடிக்கு, இரண்டு அடி வண்ண நூலில் அவரது உருவப்படத்தை ஓவியர் ரேவதி சௌந்தர்ராஜன் உருவாக்கியுள் ளார்.