tamilnadu

img

எலிக்கு வைத்த கேரட்டை உண்ண மாணவி பலி

நெகமம் அருகே எலிக்கு வைத்த கேரட்டை உண்ட மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. இவரது மனைவி கிரேஷி.  இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இவரது மகள் எனிமா ஜாக்குலின் (வயது 19) பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி மளிகை கடையில் இருந்த எலிகள் தொல்லை காரணமாக கேரட் மீது பூச்சி மருந்து தெளித்து வைத்துள்ளனர். இதை அறியாத எனிமா ஜாக்குலின் மருந்து தெளித்த கேரட் ஒன்றை எடுத்து உண்டு விட்டார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 
இதையடுத்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த ஜாக்குலின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.