tamilnadu

img

கால்நடைகள் ஏலம்: தீபாவளியால் வர்த்தகம் அதிகரிப்பு

கால்நடைகள் ஏலம்: தீபாவளியால் வர்த்தகம் அதிகரிப்பு

தருமபுரி, அக்.16- அரூர் அருகே நடைபெற்ற கால்நடை சந்தை யில், மொத்தம் ரூ.47 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந் தோறும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக் கம். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள்,  எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்ற னர். வெளிமாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கால் நடைகளை வாங்க வருகின்றனர். இந்நிலையில், புதனன்று நடைபெற்ற சந்தையில் மாடுகள் ரூ.6,000 முதல் ரூ.47,500 வரையும், ஆடுகள் ரூ.5,200 முதல் ரூ.12,500 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.47 லட்சத்திற்கு கால்நடைகள் விற் பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய்  மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறு கிறது. செவ்வாய்க்கிழமை களில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்ப னையும் சேர்ந்து நடைபெறுகிறது. சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடு கள் விற்பனைக்கு வரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட  வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்ப னைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் இரண்டு கோடி ருபாய் அள விற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பொள் ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது.  வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் காலை முதலே சந்தை களை கட்டியிருந்தது. கூட்டம் அதிகரித்து காணப் பட்டதால் மூன்று   கோடிக்கும் அதிகமான வர்த்த கம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.