யானை - மனித மோதலை தடுக்க தீவிர கண்காணிப்பு
கோவை வனப்பகுதியில் யானை - மனித மோதலை தடுக்க மதுக்கரை, மருதமலை, பொன் னூத்தம்மன் கோவில் பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் கண்கா ணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக வனத்துறையினர் தெரிவித்த னர். சர்வதேச வன தினத்தை முன் னிட்டு, கோவை மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் யானை - மனித மோதல் தடுப்பு குறித்து ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், ஆராய்ச்சியாளர்கள் நவீன் மற்றும் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்ன தாக, உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை வனக் கோட்டத்தில் மனித - வனவிலங்கு மோதல்களை தடுக்க பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. மதுக்கரை பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரி ழப்பதை தடுக்க ஏ.ஐ கேமரா கண் காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டில் ரயில் விபத்துகளில் யானைகள் உயிரிழக்கவில்லை. மேலும், மதுக்கரை, மருத மலை, பொன்னூத்தம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது கண் டறியப்பட்டு, வனத்துறையின ருக்கு தகவல் அளிக்கப்பட்டு வரு கிறது. பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மனித - யானை மோதல்களை தடுக்க வாகனங்கள் மற்றும் பணி யாளர்கள் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்கு களை வேறு இடங்களுக்கு மாற்றி னால், அவை பிழைக்க வாய்ப்பு குறைவு. தடாகம் பகுதியில் வேட் டையன் யானை நடமாட்டம் குறைந்துள்ளது. வன எல்லையோ ரங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து வரு கிறது என்றார். இந்த கருத்தரங்கில் ஏராளமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.