கோவையில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயுடனே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் யானையை பிரிந்த 4 மாத யானை குட்டி, தொண்டாமுத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. ஏற்கனவே தாய் யானைக்கு சிகிச்சை முடிந்து, வனப்பகுதிக்குள் விடப்பட்ட நிலையில், தற்போது குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் 2ஆவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.