tamilnadu

img

பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கி சிறுமி பலி

பொள்ளாச்சி, மே 25-பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பகுதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜீ(எ) முருகன். இவரது மனைவி சித்ரா. இவர்களின் 7 வயது மகள் ரஞ்சனா (எ) ரஞ்சனிஅங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்புபடித்து வந்தார். இந்நிலையில்  வெள்ளியன்று இரவு 8 மணி அளவில் தாய் சித்ரா மகள் ரஞ்சனியை அழைத்து கொண்டு பொள்ளாச்சி சென்று விட்டு பேருந்தில் நவமலை வந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது. தப்பிக்க முயன்று அலறியடித்து ஒடிய சிறுமி ரஞ்சனாவை யானை தாக்கியது. இதனைக்கண்ட தாய் சித்ரா சத்தம் போட்டு, கதறி அழுதுள்ளார். இதனையடுத்து   அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து யானையை விரட்டியுள்ளனர். இதனையடுத்து யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.பின்னர் படுகாயமடைந்த சிறுமி ரஞ்சனா  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்கண்முன்னே யானைதாக்கி மகள் இறந்தசம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்துதகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.