tamilnadu

உடுமலை முக்கிய செய்திகள்

நீர் வழித்தடத்தில் வார சந்தை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

உடுமலை, ஜூன் 30- பல ஆண்டுகளாக நீர் வழித் தடமாக  உள்ள இடத்தில் தனி நபர் சுயநலத்திற்காக வார சந்தை அமைக்கும் ஊராட்சி நிர்வா கத்தின் நடவடிக்கையை தடுக்க வேண்டு மென பொது மக்கள்  ஜமாபந்தியில் மனு அளித்துள்ளனர்.  உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில் உடுமலை மற்றும் குடிமங்கலம் வருவாய் கிராமங்களுக்கு கடந்த 13ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வரு கிறது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்து வருகின்றனர். இதில் பல மனுக்கள் தனி நபர் நலன் சார்ந்தும், சில மனுக்கள் பொது  மக்கள் நலனை பாதுகாக்கவும் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம் சோமாரபட்டி ஊராட்சி பகுதியில் வார சந்தை எவ்வித பிரச்சனையின்றி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் (க.ச.எண் 211/1) அரசுக்கு சொந்தமான நீர் வழி தடத்தில் வார சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது  பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வியாழக்கிழமைதோறும் இந்து அறநிலையத் துறைக்கு சொந்த மான (க.ச.எண் 209) இடத்தில் பல ஆண்டு களாக சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் படி நீர் வழி தடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற உத்தரவை மதிக் காமல் மழை காலங்களில் அதிக அளவு நீர் செல்லும் நீர் வழி பாதையில் புதிதாக  சந்தை அமைக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை எடுத்து வருகிறது. இம் முயற்சியை கைவிடுமாறு குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு  கொடுத்தோம். ஆனால் எவ்வித நடவ டிக்கை எடுக்காததால் புதனன்று ஜமா பந்தியில் மனு அளித்தாக தெரிவித்தனர்.
 

குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை, ஜூன் 30- கால் நூற்றாண்டு காலமாக குடியி ருக்கும் இடத்திற்கு வீட்டு மனை பட்டா  வழங்க வலியுறுத்தி உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மகாராஜ் தலைமையில் நடைபெற்ற ஜமா பந்தியில் குடியிருப்புவாசிகள் மனு அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலை வட்டம் சோமாரபட்டி ஊராட்சி  பெதபம்பட்டி தொலைபேசி நிலையத் திற்கு பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில்  முப்பதுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.  வருவாய்த்துறையிடம் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கு மாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருக்கும் வீட்டிற்கு மின்சாரம் மற்றும் வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனர். ஆனால் பட்டா மட்டும் இதுவரை வழங் கப்படவில்லை.  இந்நிலையில், இப்பகுதி மக்கள் சுய உதவிக்குழுவில் இணைந்துள்ளனர். இவர் களுக்கு வங்கி கடனுக்கு ஏற்பாடு செய் தனர். ஆனால் வங்கி அதிகாரிகள் குடியி ருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டுள்ளனர். எனவே குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா  வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரி வித்திருந்தனர்.