ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
உதகை, அக்.23- ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி உதகையில் சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணி புரிபவர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்திட வேண்டும். தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி ரூ.4 ஆயிரம் போனஸாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாயன்று உதகையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உதகை கோட்ட செயலாளர் ஜே.எம்.ஜெகநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ஆல்தொரை வாழ்த்தி பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் நீலகிரி கிளை பொரு ளாளர் முகமது ரபிஃக் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கிளை நிர்வாகி மணிகண்டன் நன்றி கூறினார்.
தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம், அக்.23- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநா் (பொ) அன்பு ஆப்ரஹாம் தெரிவித்தாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக்.27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக சென்னையிலிருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், நாமக்கல்லுக்கும், பெங்களூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, குமுளி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூருக்கும், சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூா், கடலூா், பெங்களூரு, திரு வண்ணாமலை மற்றும் வேலூா் ஆகிய வழித் தடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் கூடுதல் நடைகளும் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மேலும், அக். 24 முதல் அக். 29 வரை பயணி கள் கூட்டத்துக்கேற்ப இரவு முழுவதும் நகரப் பேருந்து கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி, பயணிகள் அனைவரும் பயண நெரி சலைத் தவிர்த்து, இனிய பயணம் மேற்கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.
கொசு புழு உற்பத்தி தனியார் நூற்பாலைக்கு அபராதம்
திருச்செங்கோடு, அக்.23- கொசு புழு உற்பத்திக்கு காரணமான நூற் பாலைக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.5 ஆயிரம் அபரா தம் விதித்துள்ளது. தமிழகம் முழுவதும்வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே நீர் தேங்குவதால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் டெங்குக்கு காரணமான கொசு புழுக்களை அழிக்கும் நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின் றன. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நக ராட்சிக்குட்பட்ட பட்டறை மேடு பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பயன்படுத்தப்படாத பழைய பொருட்களில் மழை நீர் தேங்கி இருந்ததும், அதில் கொசு புழுக்கள் உற் பத்தியாகி இருந்ததையும் நகராட்சி அதிகாரி கண்டறிந் தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் நூற் பாலைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்ச ரிக்கை விடுத்தனர். பின்னர், நூற்பாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப் பட்டது. மேலும், காய்ச்சல் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதே போன்று தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி முழு வதும் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொ) சுகுமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு கோவை கொடீசியா அருகில் தற்காலிக பேருந்து நிலையம்
கோவை, அக்.23- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கொடீசியா நுழைவு வாயில் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பயணிகள் மற்றும் வாகனங்கள் வந்து செல்வதால் கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா சாலை, மத்தியப் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் மற்றும் அவிநாசி சாலை ஆகிய இடங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வண்ணம் இம் முறை காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், போக்கு வரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து கொடீ சியா நுழைவு வாயில் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதனையடுத்து, அக்.25 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் அக்.27 ஆம் தேதி வரை கூட் டம் முடியும் வரை சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கொடீசியா நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. ஏனைய பேருந்துகளான திருப்பூர் வழி பல்லடம், அவிநாசி, ஈரோடு, நாமக்கல், அந்தியூர், கோபி ஆகிய பேருந்து கள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படும். மேலும், மேற்காண் தற்காலிக பேருந்து நிலை யத்தில் பயணிகள் நலன் கருதி குடிநீர் வசதி, மின் சார வசதி, கழிப்பிட வசதி, நிழற்குடை வசதி ஆகி யவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அமைக்கப் பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை விழா
சேலம், அக்.23- சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கலாச்சார கலைவிழா புதனன்று நடை பெற்றது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 42 பள்ளிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலாச்சார விழா நடைபெற்றது. இதில் நடனம், கிராமிய பாடல்கள், ஒயிலாட்டம் மற்றும் கட்டுரைப் போட்டி, வினாடி-வினா மற்றும் பலகுரல் நிகழ்வு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கல்வி அதிகாரி கணேச மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மின்தடை
அரூா்,அக்.23- அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரூா் வட்டாரப் பகுதியில் வியாழயன்று (அக்.24) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார். அதன்படி அரூா் நகா், மோப்பிரிப்பட்டி, அக்ரா ஹரம், பெத்தூா், சந்தப் பட்டி, அச்சல்வாடி, பேதா தம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட் டுச்சாலை, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள் மின் விநியோகம் இருக் காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.