tamilnadu

img

தருமபுரி அரசு மருத்துவமனை அருகே பராமரிப்பின்றி கழிப்பிடம்

தருமபுரி,  ஜூன் 27- தருமபுரி அரசு மருத்துவமனை அருகே பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தையொட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச சிறு நீர் கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப் பறையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நகராட்சி நிர்வாகம் சரியாக பரா மரிக்காததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கழிவறைக்கு தண்ணீர் வருவதில்லை.  தண்ணீரின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவறை மிகுந்த சேதமடைந்த துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்படும் தனியார் ஆம்பு லன்ஸ் வாகனங்கள் கழிவறையை மறைத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் இயற்கை உபாதைக்கு செல்ல சிரமப்படு கின்றனர். மேலும், இப்பகுதியில் கழிப் பிடம் இல்லாததால் சாலையின் ஓரமாக சிறுநீர் கழிக்கப்படுவதும், மலம் கழிக்கப்ப டுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரசீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ஆயிரக்கணக்கான நோயாளி கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடத்தில் அமைக்கப்பட்ட இலவச கழிப்பறையை, நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் தண்ணீர் வசதி ஏற் படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.