கோவை, ஜூலை 23- தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட 9 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல் லூரி மற்றும் மருத்துவமனை முதல் வர் அசோகன் செவ்வாயன்று செய் தியாளர்களைச் சந்தித்தார். அப் போது அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு 1.5 செமீ விட்டம் இருக்க வேண்டிய தமணி நாளம், 10 மடங்கு பெரிதாகி 15 சென்டி மீட்டரில் இருந்த நிலை யில் சிகிச்சைக்காக வந்ததார். அவ ருக்கு உடனடியாக அறுவை சிகிச் சையளிக்க முடிவு செய்யப்பட்டு, திங்களன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 லட் சம் ரூபாய் மதிப்பில் தனியார் மருத் துவமனையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையை முதலமைச் சர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் மருத்துவமனை யில் மட்டுமே செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தொண்டை அடைப் பான் நோய் பரவல் குறித்து அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த கடம் பூர் மலைப்பகுதியில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப் பட்ட 8 முதல் 16 வயதுடைய 9 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்நோய் பரவியிருக்கிறது. 9 பேரும் உடல் நலம் தேறி வருகின்றனர். நோய் தாக்கியவர்களிடம் இருந்து எச்சில், தும்மல் உள்ளிட்டவை மூலம் நோய் பரவும். ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து கிடைப்பதில் தட் டுப்பாடு இருந்தது. தற்போது பாண்டிச்சேரியில் இந்து போதிய மருந்துகள் பெறப்பட்டுள்ளது. தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும் என்றார். மேலும், இந்நோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.