tamilnadu

img

அவிநாசி அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா

அவிநாசி, ஆக. 2- அவிநாசி அரசு மருத்துவமனை யில் மருத்துவமனை நாள் விழா, தாய்ப்பால் வார விழா மற்றும் கர்ப்பி ணிகளுக்கு சீர்வரிசை வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நோய் பிரிவும், மனநலம், மகளிர் நல பிரிவும், எலும்பு முறிவு பிரச்சனைக்கு ஆரம்ப நிலை சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், இம்மருத்துவமனையில் மருத்து வமனை நாள் விழா, தாய்ப்பால் வார விழா மற்றும் கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. முதன்மை மருத்துவ அலுவலர் ரமணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மருத்துவர் பாலாஜி  வர வேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவிநாசி வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார். ரோட்டரி சங்கம் சார்பில் அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.  இந்த விழாவில் மருத்துவர் ரம்யா, ரோட்டரி சங்க தலைவர் அருணாசலம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராதா கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்ற னர். முன்னதாக, மருத்துவர், செவிலி யர்கள், பணியாளர்களி பணியினைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.