போர்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை
உதகை, நவ. 30- உதகையை அடுத்த சன்மேரிஸ் ஹில் பகுதி யில் பள்ளியின் முன்பு தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாததால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தால் மூன்றா வது கூட்டு குடிநீர் திட்டத் திற்கு குழாய்களை பதிப் பதற்காக உதகை ரயில் நிலைய சாலையில் இருந்து சன் மேரீஸ் ஹில்,நாசரேத் கான்வென்ட் உள்ளிட்ட அனைத்து நடைபாதை பகுதிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ரயில்வே நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த தால் குழாய் பதிக்கும் பணியினை பாதி யிலே கைவிடப்பட்டது. ஆனால்,இதன் பின்னர் தோண்டப்பட்ட குழிகள் மூடப்ப டாத காரணத்தால் நடைபாதை முற்றி லும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கழிவுநீர் குழாய்கள் உடைந்து இருப்பதால் சாலைகளில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்க ளும் , பெத்லகேம் பள்ளி, சூசையப்பர் பள்ளி, சூசையப்பர் ஆசிரியர் பள்ளி, ரெக்ஸ் பள்ளி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட பள்ளி களில் படிக்கும் மாணவர்களும் இந்த நடை பாதையின் வழியாகதான் தினந்றும் சிரமத்தோடு நடந்து செல்கின்றனர்.அதேபோல இங்குள்ள தெருவிளக் குகளும் பல மாதங்களாக சரிவர எரிவ தில்லை.காட்டு பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. இதனால் இரவு நேர த்தில் இந்த நடைபாதையை பயன்ப டுத்த குழந்தைகளும், பெண்களும் அச்சப் படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே இந்த நடைபாதையை போர்க்கால அடிப்படை யில் சீர் செய்ய வேண்டும் என இப்பகுதி மக் கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.