tamilnadu

img

அனைத்து புரட்சிக்கும் வித்திட்டது காகித புரட்சி

தருமபுரி, ஜூலை 27- அனைத்து புரட்சிக்கும் வித்திட்டது காகித புரட்சி என தருமபுரியில் நடை பெற்ற புத்தகத் திருவிழா வில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர்  ஸ்டா லின் குணசேகரன்  பேசி னார். தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத் தில் நடைபெற்று வரும்  புத்தக திருவிழா வில் அறிவுசார் கருத்தரங்கம் நடைபெற் றது. இக்கருத்தரங்கத்திற்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், காகித புரட்சி என்ற தலைப் பில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், சமுதாய மாற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றத்துக்கும், சமூக பூர்வமான நூல்களை புத்தகத் திரு விழாவில் வைக்க வேண்டும். உலகில் நடைபெற்ற அனைத்து புரட்சிக்கும் வித்திட்டது காகித புரட்சி தான்.  குறிப் பாக, 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யா புரட்சிக்கும்  காகித புரட்சி தான் உந்துதலாக இருந்தது தான்  வரலாறு என குறிப்பிட்டார். மேலும், ஒருநாட்டின் முக்கியத்துவம் என்பது நூலகம்தான், எதிரி நாடுகள் படை எடுக்கும் போது, முதலில் நூல கத்தைத்தான் அழிப்பார்கள். அப்படி தான் யாழ்ப்பாணத்திலும் நடந்தது. நூலகத்தை அழித்து சாம்பலாக்கினர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜாபர்சன் தனது முன்னேற்றத்திற்கு காரணம் நூல்களை படித்ததுதான் என அவரே குறிப்பிட்டுள்ளார். ஆகவே, வாசிக்க வேண்டும். பிறகு யோசிக்க வேண்டும். வாசிக்காமலே யோசித்து பயனில்லை. தமிழகத்தில் தரங்கப்பாடியில் 1712 ஆம் ஆண்டு அச்சு இயந்திரம் இறக் குமதி செய்யப்பட்டது. பின்னர் காகித ஆலை நிறுவப்பட்டது. பிறகு 1812 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் திருக்குறள் காகிதத்தில் அச்சிடப்பட்டது. உலக ஏகாதிபத்தியமாக உள்ள அமெரிக்காவுக்கு 500 ஆண்டுகால வர லாறுதான் உள்ளது. ஆனால், தமிழுக்கு 2 ஆயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாரம்பரியம், தொன்மை உண்டு. பழம்பெரும் தொன் மையை இளைய தலைமுறைக்கு பறை சாற்றும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு வரலாற்று அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ஆர்.முரளி, பேராசிரியர் இ.பி.பெருமாள், ஆசிரியர்கள் இ.தங்கமணி, கே.சின்னக் கண்ணன், கொங்கு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி நிர்வாகி சி.முத்து, சிக ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜி.தங் கராசு, மருத்துவர் பகத்சிங், தகடூர் இரா.வேணுகோபால், பெ.அஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தருமபுரி மாவட்ட படைப்பாளர்களின் நூல் வெளீயிட்டு விழா நடைபெற்றது.