மே.பாளையம், மே 17 - கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபட்டுள்ளதால் கோவையின் கல்லார் அரசு பழப்பண்ணையில் பலா விற்பனை வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் நீலகிரி மலையடிவா ரத்தில் அடர்ந்த வனத்தை ஒட்டி அமைந்துள்ளது கல்லார் அரசு தோட் டக்கலை பழப்பண்ணை. இங்கு தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள் ள்ளதால் பழப்பண்ணையில் தற்போது கொத்து கொத்தாய் பலாப்பழங் கள் காய்த்துத் தொங்குகின்றன. சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல் வேறு வகை சுவை மிகுந்த பலாப்ப ழங்கள் இங்கு கிடைக்கும் நிலை யில் கொரோனா பரவலை கட்டுப்ப டுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு காரணமாக இவற்றின் விற்பனை தடைபட்டுள்ளது. இந்நிலையில் பலாப்பழங்கள் அனைத்தும் மரங்களிலேயே பழுத்து மனம் வீசத் துவங்கியுள்ளதால் இவற்றை விரும்பி உண்ணும் காட்டு யானைகள் இப்பழப்பண்ணையை சுற்றி வட்டமிட துவங்கி விட்டன.
இதனால், தற்போது கல்லார் பழப் பண்ணையின் நுழைவு வாயில் உட் பட தோட்டத்தை சுற்றி புதிதாக சூரிய ஒளி மூலம் இயங்கும் சோலார் மின் வேலித் தடுப்புகள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், இந்த மின் கம்பி தடுப்புகளின் மீது மரங்களை சாய்த்து யானைகள் உள்ளே நுழைய முற்படும் என்பதால் தொங்கும் வகையிலான மின் கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி இடைவெளியில் வரிசையாக இந்த சோலார் மின் கம்பிகள் தொங்க விடப்பட்டுள்ளதால் இவற்றை துண் டிக்க முடியாமல் யானைகள் உள்ளே ஊடுறுவி செல்வது தடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட் டுள்ள சில தளர்வுகள் காரணமாக இந்த தோட்டக்கலை பழப் பண்ணை திறக்கப்பட்டுள்ள போதி லும் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் பண்ணைக்கு வரக்கூடாது என்ற தடை நீடிக்கின் றது.
இதனால் பலாப்பழங்களின் விற்பனை இல்லாத சூழலில், உள் ளூர் வியாபாரிகள் பலர் முன்பதிவு செய்து பலாப்பழங்களை சில்லறை விற்பனைக்காக வாங்கிச் செல்கின் றனர். போக்குவரத்து தடை காரண மாக பண்ருட்டி, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளை யத்திற்கு வரும் பலாப்பழங்கள் வரு வதில்லை என்பதால் கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை யில் பலாப்பழங்களின் விற்பனையும் ஓரளவு சூடு பிடித்துள்ளது. ஆனா லும், சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் தடை பட்டுள்ளதால் இங்கு விளைந்துள்ள பலாப்பழங்கள் போதிய விற்பனையின்றி வீணாவது தவிர்க்க இயலாது என தோட் டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.