tamilnadu

img

மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கிடுக இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 26- மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்துவதோடு, அனைவ ருக்கும்  இலவசமான இணையச் சேவையை உறுதிப்படுத்திய பின்பே ஆன்லைன் கல்வி திட்டத்தை துவக்கிட வேண்டுமென வலியு றுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு அல்லது மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங் களை அடுத்த 6 மாதத்திற்கு வீடுகளுக்கே சென்று வழங்கிட வேண்டும். அனைவ ருக்கும்  இலவசமான இணையச் சேவையை உறுதிப்படுத்திய பின்பே ஆன்லைன் வகுப்பை துவங்கிட வேண்டும். பாகு பாடற்ற சமத்துவக் கல்வியை உறுதிப் படுத்த வேண்டும்.

மாணவர்களின் குடும்பத் திற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கிட வேண் டும். மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளையும், ஆய்வு மாணவர்க ளுக்கான நிதியையும் உடனே அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வீட்டிலிருந்தபடியே ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் குழு அறைக்கூவல் விடுத்தது.  

இதன்ஒருபகுதியாக கோவை மாவட் டத்தில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத் தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.