tamilnadu

img

தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பெரும் அவதி பார்வையைற்றோர் ஆட்சியரிடம் மனு

 கோவை, பிப். 3 –  செட்டிபாளையம் சமத்துவபுரத்தில் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பெரும் அவதிக்குள் ளாவதாகவும், நாள்தோறும் ஆட்டோவில் பயணிப்ப தால் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும் பார்வையற் றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு  அளித்தனர்.   இதுகுறித்து அவர்கள் கூறுகையில், போத்தனூர் செட்டி பாளையம் சமத்துவபுரம் கலைஞர் நகரில் உள்ள சாலை கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தோண்டப் பட்டது. இதுநாள் வரையில் அச்சாலைகள் சீரமைக்கப்ப டவில்லை. இப்பகுதிக்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும்  வந்து கொண்டிருந்தது. இச்சாலை சீரமைக்கப்படாததால் இப்பேருந்தும் வருவதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்பட்டுள் ளது. பார்வையற்ற நாங்களும் நாள்தோறும் வாடகை ஆட்டோவில்தான் பயணிக்க வேண்டியதாக உள்ளது. இத னால் பொருளாதார சிரமத்தை எதிர்கொள்கிறோம். உடன டியாக சமத்துவபுரம் சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளதாக தெரிவித்தனர்.