tamilnadu

img

சேலம் உருக்காலை தனியார்மயத்தை எதிர்த்து 30 நாட்களைக் கடந்த காத்திருப்பு போராட்டம்

சேலம், செப்.4- மத்திய பாஜக அரசு, சேலம் உருக் காலையை தனியாருக்கு விற்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை யில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாஜக தொழிற்சங்கமான பிஎம்எஸ் தொழிற்சங் கத்தின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலா ளர் புதனன்று ஆதரவு தெரிவித்தும், வாழ்த்துரை வழங்கினார்.  சேலம் உருக்காலை உள்ளிட்ட மேலும் 3 இரும்பாலை மற்றும் உருக்காலைகளை மத்திய பாஜக மோடி அரசு தனியாருக்கு விற்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்நிலையில் சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 31 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலை வர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தும், போராட்டத்தை வாழ்த்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உருக்காலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பாஜக அரசின் தனி யார்மயக் கொள்கைக்கு கண்டனம் தெரி வித்தும் பாஜகவின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய ஒருங்கி ணைப்பு செயலாளர்  சுரேந்திரன் வாழ்த் துரை வழங்கினார். அவருடன் அந்த அமைப்பின் நிர்வாகிகள்  பாண்டி, துரை ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.  பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்தும், தனியார்மயக் கொள்கையைக் கண்டித்தும் பாஜகவின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான பிஎம்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இச் செயல்  பாஜக அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக  போராடும் அள விற்கு சென்று விட்டதாக  தொழிற் சங்கத் தினர் தெரிவித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில்  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங் கேற்றனர்.