கோவை, ஜூன் 23- மின்சாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண் டுமென தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.சி.ரத்தினசாமி வலியுறுத்தி யுள்ளார்.
கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.சி. ரத்தினசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 -ஐ கைவிட வேண்டும். மின்சாரத்தை பொது பட்டிய லில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
மின்சார சட்டத் திருத்த மசோதா விற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தி மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். இதுதொடர்பாக ஞாயிறன்று ஈரோட் டில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து என்பதை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துவோம்.
மேலும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இலவச மின் சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என கூறும் பாஜகவின் மத்திய அரசு, மாநில அர சிற்கு ஏன் அழுத்தம் தர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச மின் இணைப்பு கேட்டு முன் பதிவு செய்து காத்தி ருக்கும் அனைவருக்கும் மின் இணைப்புகள் வழங்கிட வேண்டும். கைத்தறி, விசைத்தறி மற்றும் வீடுகளுக்கு சலுகை கட்டண மின் சாரம் தொடர வேண்டும் என்றும் தெரி வித்தார்.