tamilnadu

img

தமிழ்நாடு உதயமான தினம் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம்

கோவை, நவ.2- தமிழ்நாடு உதயமான தினத் தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் பல்வேறு இடங் களில் தமிழ் வளர்ச்சி கருத்தரங் கங்கள் நடைபெற்றன. நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு மாநிலம் உதயமான தினம். இந்த நாளை தமிழ் வளர்ச்சி நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாட முடிவு செய்துள்ளது. இதையொட்டி வெள்ளியன்று தமிழகம் முழுவதும் தமிழ், தமிழர்,  தமிழக வளர்ச்சியை முன்னிறுத்தி  கருத்தரங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.  இதன்ஒருபகுதியாக, கோவையில் வெள்ளியன்று தமிழ்வளர்ச்சி கருத்தரங்கம் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் வரவேற்புரையாற்றினார். இதில் புலவர் செந்தலை ந.கவுதமன், கவிஞர் நா.முத்துநிலவன், சிபிஎம்  மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பாலாமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.  இதில் தமிழ் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பங்கு குறித்தும், தற்போது மொழியின் மீது நடைபெறும் தாக்குதல் குறித்தும், எட்ட வேண்டிய இலக்கு குறித்தும் கருத்தரங்கில் கருத்தாளர்கள் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி ஊழியர்கள், பொது மக்கள் ஏராளமானோர் பங் கேற்றனர். முடிவில் கோவை வடக்கு நகர செயலாளர் என்.ஆர்.முருகேசன் நன்றி கூறினார்.
சேலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர  கமிட்டி சார்பில் பழைய சூர மங்கலம் சிஐடியு மேக்னசைட் அலுவலகத்தில் வெள்ளியன்று தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ் தலைமை வகித்தார்.  இதில் மாநிலக்குழு உறுப்பினர்  ஜி.ஆனந்தன் கருத்துரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. பாலகிருஷ்ணன், கமிட்டி உறுப் பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  இதேபோல் சேலம் வடக்கு  மாநகரக்குழு சார்பில் தமிழ் வளர்ச்சி திறந்தவெளி பொதுக்  கருத்தரங்கம் சின்னேரிவயல்காடு பகுதியில் வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன்குமார் தலை மையில் நடைபெற்றது. மாநகரக் குழு உறுப்பினர் ஆர்.வி.கதிர் வேல் வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை செயலாளர்கள் டி. ஞானவேல், ஆர்.ரம்யா, எம்.மேக ராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி,மாவட்டக்குழு உறுப்பினர் எம்.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர் வி. வெங்கடேஷ் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள். ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் முன்பு சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் சி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, ஒன்றிய  செயலாளர் மேவை. சண்முக ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்  கே.ராஜாதி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.