திருப்பூர், ஜூன் 26 - போக்குவரத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஜூலை மாதத்திற்குள் நிறை வேற்ற வேண்டும். அதற்கான நட வடிக்கைகள் இல்லாவிட்டால் ஆகஸ்ட் மாதம் சென்னை ஸ்தம் பிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை மண்டல ஐந்தாவது மாநாடு திருப்பூர் ஹார்வி குமார சாமி மண்டபத்தில் செவ்வாயன்று தொடங்கியது. அன்று மாலை பிரதி நிதிகள் மாநாடு தொடங்கி புதன் கிழமை நிறைவடைந்தது. இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்: ஓய்வூதியர்களுக்கு அரசு தர வேண்டிய பணப்பலன்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகைகள், பஞ்சப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகிய நடவடிக்கைகளை ஜூலை மாத இறுதிக்குள் மேற் கொள்ளுமாறு மாநாடு வலியு றுத்தியது. இந்நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாதபட்சத்தில் ஆகஸ்ட் மாதம் சென்னை ஸ்தம் பிக்கும் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் குடும்ப ஓய்வூதியர் மருத்துவ உதவி நிதி மாதம் ரூ.100 வீதம் வழங்க அரசு, நிர்வாகத்தை வலியுறுத்தி ஜூலை மாதம் கோவை மண்டல அலுவலகம் முன் பாக போராட்டம் நடத்துவது என்றும் இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை மண்டலத் தலைவராக ஜி.பழனிச்சாமி, மண்டலப் பொதுச் செயலாளராக பி.செல்வராஜன், பொருளாளராக எம்.கிருஷ்ணராஜ் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக ஆர்.சேதுராமன், சி.பழனிச்சாமி, எச்.எம்.மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 15 துணைத் தலைவர்கள், 15 செய லாளர்கள் என மொத்தம் 36 நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.