கோவை, ஜூலை 16– நெல்லையில் நடைபெறும் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாட்டையொட்டி கோவையில் செவ்வாயன்று தியாகிகள் ஜோதி பயண பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட்டது. அரசு போக்குவரத்தை திட்ட மிட்டு பலவீனப்படுத்தி, தனி யாருக்குத் தாரை வார்த்திட அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நிர்வாகத்திறனின்மையால் ஏற் படும் நஷ்டத்தை தொழிலாளர் களின் மீது சுமத்துவதும், போரா டிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளையும் அரசு பறித்து வருகிறது. இதனை எதிர்த்து சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருநெல் வேலியில் ஜூலை 21 முதல் 23வரை தமிழ்நாடு அரசுபோக் குவரத்து ஊழியர் சம்மேளன 14 ஆவது மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு போக்குவரத்து தொழிலாளர் களின் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் கோவையில் தியா கிகள் நினைவு ஜோதி பயணம் செவ்வாயன்று நடைபெற்றது. கவுண்டம்பாளையம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இருந்து தொழிற்சங்க போராளி கே.ரமணி நினைவு ஜோதியை அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரம சிவம் எடுத்துக் கொடுக்க மாவட்ட பொருளாளர் கோபால் பெற்றுக் கொண்டார். உக்கடம் பணிமனை முன்பு தொழிற்சங்க தலைவர் எம்.நஞ்சப்பன் நினைவு ஜோதியை சம்மேளன துணை தலைவர் பா.காளியப்பன் எடுத்துக் கொடுக்க பொது செயலாளர் வேளாங்கன்னி ராஜ் பெற்றுக்கொண்டார். ஒண்டிபுதூர் பணிமனை முன்பு எம்.என்.கண்ணன் நினைவு ஜோதியை அலுவலக செயலா ளர் நாகராஜ் எடுத்துக் கொடுக்க ஜான்கென்னடி மற் றும் ஆனந்த் ஆகியோர் பெற் றுக்கொண்டனர். மூன்று பகுதி களில் இருந்து துவங்கிய ஜோதி பயணம் நகரத்தின் பல்வேறு முக்கிய சாலைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நிறைவாக சுங் கம் பணிமனை முன்பு தொழிலா ளர்களின் எழுச்சிகர முழக்கத் தோடு வந்தடைந்தது. முன்னதாக நினைவு ஜோதி பிரச்சார இயக்கத்தில், விபத்தை குறைக்க, போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். அரசுபோக்குவ ரத்து கழக வரவு மற்றும் செல விற்கான வித்தியாசத்தை ஈடு கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊதிய வஞ் சனையை களைய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர். தியாகிகள் நினைவு ஜோதி பிரச்சார இயக் கத்தில் ஏராளமான அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் பங் கேற்றனர்.