tamilnadu

நியாய விலை அங்காடி கணக்குகள் சமூகத் தணிக்கை

ஈரோடு,ஆக.13- கிராமப்புற நியாய விலை அங் காடிகளின் கணக்குகள் ஆக.15 ஆம் தேதியன்று  நடைபெறும் கிராம சபை முன்பு சமூகத் தணிக்கைக்காக வைக் கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக அமையும் வண்ண மாக கிராமப் புறங்களில் செயல்படும் நியாய விலை அங்காடிகளின் முன்னு ரிமை குடும்ப அட்டைகள் பயனாளி களின் பட்டியல், மண்ணெண்ணெய் விநி யோக ரசீது, ரசீது புத்தகங்கள் ஆகியவை  ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று  அனைத்து ஊராட்சிகளிலும் நடை பெறும் கிராம சபை கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு  வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.