கோவை, செப். 20- கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீர மைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
. இவற்றில் மேற்கு மண்டலத்தில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் ரூ.19.36 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் குமாரசாமி செல்வம்பதி குளம் ரூ.31.25 கோடி மதிப் பீட்டிலும் குளங்களின் கரைகளை பலப்ப டுத்தி, புனரமைத்து சீரமைக்கும் ஆரம்பப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும். இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய (பெட் லேன்ட்) அமைத் தல், மதிவண்டி பாதை அமைத்தல், உபரி நீர் சிற்றணை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத் தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்ப தற்கான பணிகள், நீர்வழிப்பாதை மேம்ப டுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை குறிப் பிட்ட ஒப்பந்த தேதிக்குள் செய்து முடிக்கு மாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத் தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகரப் பொறி யாளர் ஆ.லட்சுமணன், மாநகர செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.