சேலம், ஜூலை 17- சேலம் நங்கவள்ளி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை சரமாரியாக அரி வாளால் வெட்டிவிட்டு தப்பி யோடிய கும்பலை கைது செய்யக் கோரி கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்டம், நங்க வள்ளி ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஜீவானந்தம். இவ ருடைய சகோதரர் வேலுமணி. இவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அப்பகுதி நிர்வாகி யாகவும், நங்கவள்ளியில் ஜவுளி கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று இரவு திடீரென இவரின் ஜவுளி கடைக்குள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் வேலு மணியை அரிவாளால் சரமாரி யாக வெட்டினர். அதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந் தார். இதனை கண்டு அதிர்ச் சியடைந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் கூச்சல் எழுப்பவே அருகில் இருந் தவர்கள் திரண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அந்நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதன்பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேலு மணியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்ப வத்தை அறிந்த நங்கவள்ளி காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தீபா கார்க் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை மேற் கொண்டனர். இந்நிலையில், இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து புதனன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் வணி கர்கள் கடைகளை அடைத்து தங் களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பந் தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் அனை வரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் நங்கவள்ளி பகுதி யில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.