பொள்ளாச்சி, ஜூன் 30- மழைநீரை, வங்கியில் சேகரிக்கும் பணத்தை போல நாம் கவனமாக சேகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அடுத்த சிறுக்களந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் பள்ளியில் நவீன அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா மற்றும் நுழைவு வாயில் திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா சனியன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சரோ ஜினி பழனிசாமி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந் தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டுநவீன அறிவியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்து, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ரவீந்திரன் நாயர், அறக்கட்டளை நிர்வாகிகள் மருத்துவர் செந்தில்குமார், உமாராணி , பொறியாளர் சுகுமார், சாந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.