கோவை, ஜூலை 24– கோவையில் பாதாள சாக்கடையை சுத்தப்ப டுத்த பாதுகாப்பு உப கரணமின்றி சாக்கடை யில் இறங்கிய துப் புரவு பணியாளர்களை பத்திரிகையாளர் தடுத்து நிறுத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பாதாள சாக்கடை யில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீக்கும் பணி யில் புதனன்று இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், துப்புரவு பணியாளர் களே இறங்கி தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற தீக்கதிர் செய்தியா ளரும், வழக்கறிஞருமான டென்னீஸ் தடுத்து நிறுத்தினார். எவ்வித உபகர ணங்களும் இல்லாமல் சாக்கடைகளை மனிதர்களே தூய்மைப்படுத்துவது விதி களை மீறிய செயல் எனக் கூறி, அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினார். மேலும், இது தொடர்பாக துப்புரவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு, மேற்கொண்டு இந்தப் பணிகளை செய்வதை அனுமதிக்ககூடாது என எச்சரித்தார். இதுகுறித்து டென்னிஸ் கூறுகை யில், “எந்தவிதமான பாதுகாப்பு உப கரணங்களும் இன்றி துப்புரவு பணியா ளர்கள் சாக்கடையின் அடைப்பை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை தடுத்து நிறுத்தி துப்புரவு ஆய்வாளரை அழைத்து கேட்டபோது, அடைப்பு ஏற்பட்டுள்ளது, சாக்கடையை சுத்தம் செய்கிறார்கள் என அலட்சியமாக பதில ளித்தார். மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவு குறித்து அவ ருக்கு நினைவுபடுத்தினேன். இதைத் தொடர்ந்து, அந்தப் பணிகளை அவர் நிறுத்தி துப்புரவு பணியாளர்களை வெளியேற உத்தரவிட்டார். கோவை மாநகரத்தின் மையப்பகு தியிலேயே இதுபோன்று அத்துமீறல் நடைபெற்றால், கிராமத்தின் உட்புற பகுதிகளில் சாக்கடை அடைப்பை எடுப்பது எப்படி தெரியும். இதுபோன்ற அரசின் அலட்சியத்தால்தான் விஷ வாயு தாக்கி அப்பாவி தொழிலாளர்கள் இறப்பது அதிகரித்து வருகிறது. யாராவது தடுப்பார்கள் என்றில்லாமல் நாமே தடுக்க வேண்டும் என்பதற்காக இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித் தார். இது குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி யிடம் கேட்டபோது, “கோவை மாநக ராட்சி இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளர் மீதான புகார் நிரூபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல் களை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒருபோதும் ஊக்குவித்தது இல்லை,” என்றார்.