தருமபுரி, ஆக.6- தருமபுரி மாவட்டத்தில் கொடுங்குற்றம் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பது குறித்து தமிழக காவல் துறை இயக்குனர் உத்தரவிட்டார். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜன் மேற்பார்வையில், தருமபுரி மாவட்டத்தில் கொடுங்குற்றம் செயல் களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர் களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு மட்டும் 10 கொடுங்குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு தருமபுரி மாவட்டத்தில் சரித்திரப் பதிவு குற்றவாளிகளின் எண்ணிக்கை 396 ஆக இருந்தது. இந் தாண்டு 151 புதிய குற்றவாளிகள் கண்டறி யப்பட்டு அவர்களை சரித்திர பதி வேடு குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன. தற்போது தருமபுரி மாவட்டத் தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் எண்ணிக்கை 545 ஆக இருந்து வரு கிறது. மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு கடந்த 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 41 சரித்திர பதிவேடு குற்றவாளி களின் நன்னடத்தைக்கான பிணைய பத்திரம் எழுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 சரித்திர பதிவேடு குற்றவாளி களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.