திருப்பூர், பிப். 6 – திருப்பூர் மாநகராட்சி அண் ணாநகரில் தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற மயான இடம் மீட்கப்பட்டது. திருப்பூர்- பெருமாநல்லூர் சாலை, அண்ணாநகர் மேற்கு பகுதியில் கூத்தம்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தத்துக்கு சற்று தள்ளி பொது மக்கள் பயன்படுத்தி வந்த மயானம் அமைந்துள்ளது. சமீப காலமாக மின் மயானம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், பெரும்பாலானோர் தங்கள் வீட்டு மரணச் சம்பவங்க ளில் உயிரிழந்தோரை மின்மயா னத்துக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் 40 ஆண் டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த மேற்படி அண்ணா நகர் மயா னத்தில் சடலத்தைப் புதைப்பது குறைந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மயானத்திற்கு அருகில் வசிக்கும் தனியார் ஒருவர் மயான இடத்தைச் சுத்தம் செய்து சமப் படுத்தி உள்ளார். அங்கேயே சாலையோர சிறு கடைகளை நடத்த அனுமதி கொடுப்பது போலக் கொடுத்து நிலவாடகை வசூலித்து வந்ததாகக் கூறப்படு கிறது. இதையறிந்து இப்பகுதி யைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மயான இடத்தைச் சுற்றிலும் கயிற்றால் கட்டி, பொது மக்களுக் குரிய மயான இடம் என பிளக்ஸ் தட்டி வைத்துள்ளனர்.
ஆனால் நாளிதழ் ஒன்றில் ஆக்கிரமிப்பிலிருந்து அரசியல் கட்சிகள் மீட்ட மயானத்தை, சில அரசியல் கட்சியினர் கொடி கட்டி இடத்தை ஆக்கிரமித்து விட்டதாக நேர்மாறான தவறான செய்தியை வெளியிட்டுள் ளனர்.இந்நிலையில் இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி அரசியல் கட்சியினர், பொது மக்க ளிடம் இது குறித்து விசாரித்துள் ளார். தனியார் ஆக்கிரமித்த இடத்தை மீட்டு பாதுகாப்புச் செய்திருப்பதாக அவர்கள் பதில் அளித்தனர். திருப்பூர் வடக்கு வட்டாட்சி யரும் வியாழனன்று தொலைபேசி மூலம் இப்பகுதி அனைத்துக் கட்சி யினரின் சார்பாக இளங்கோ என் பவரிடம் தொடர்பு கொண்டு பேசி யிருக்கிறார். அப்போது கயிற்றால் கட்டி வேலி அமைக்கப்பட்டுள்ள மயான இடத்தில் கட்சிக் கொடி களை அகற்றிவிடும் படியும், இடத்தை ஓரிரு நாட்களில் அளந்து மயானத்தின் பயன்பாட்டுக்குக் கொடுப்பதாகவும் தெரிவித்துள் ளார். அதன் அடிப்படையில் அங்கு கட்டப்பட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் கொடிகளை அகற்றி யுள்ளனர். அதேசமயம் வருவாய்த் துறையினர் உறுதியளித்தபடி இந்த இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். சுற்றிலும் வேலி அமைத்து இரும்புக் கதவு நிறுவி மயானத்தைப் பாதுகாக்க ஏற் பாடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். வருவாய்த் துறையினர் மயான இடத்தை அளந்து கொடுத்தபின் பொது மக்கள் பங்களிப்பிலேயே சுற்றிலும் வேலி, கதவு அமைத்துக் கொள்ளவும் தயாராக இருப்ப தாக, அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் சார்பில் இளங்கோ தெரிவித்தார்.