tamilnadu

முதலிபாளையம் ஊராட்சியில் வாரச்சந்தை ஏற்படுத்த கோரிக்கை

திருப்பூர், ஆக. 17– முதலிபாளையம் ஊராட்சியில் வாரச் சந்தை ஏற்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராம சபை யில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. முதலிபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்னாபுரம் கிளைச் செயலாளர் ஏ.செல்வன் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிட்கோ பகுதி யில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையின் இருபுறமும் காய்கறி, துணி உள்பட பல்வேறு வகை சாலை யோர கடைகள் அமைப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படு கிறது. எனவே இந்த நெருக்கடியைப் போக்க முதலிபாளையம் ஊராட்சி யில் வாரச் சந்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அத்துடன் 600க்கும் மேற்பட்டோர் படிக்கும் முதலிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சாலையில் ஏரா ளமான வாகனங்கள் வேகமாக செல்வ தால் மாணவர் பாதுகாப்புக்கு, விபத்து நடக்காமல் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் அளிக்கப் பட்டது. மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதல் குடிநீர் வழங்கவும் கோரிக்கை  விடப்பட்டது.