ஈரோடு,செப்.18- ஈரோட்டில் கடந்தாண்டில் திருட்டு போன பொருள் கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் திருட்டுப் போன 70 வழக்குகளில் தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள 5 லாரிகள், 6 கார்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 15 இருசக்கர வாகனங்கள், 39 கைபேசிகள், ஒரு மடிக்கணினி, பணம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 900 மற்றும் 277 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். மேலும், ஈரோடு நகர கோட்டத்தில் 13 வழக்குகளில், 63 லட்சத்து 36 ஆயிரத்து 900 மதிப்புள்ள இரண்டு லாரிகள், இரண்டு கார்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், மூன்று இரு சக்கர வாகனங்கள், ஒன்பது லட்சத்து 54 ஆயிரத்து 900 ரூபாய் ரொக்கம், 66 பவுன் தங்க நகைகளும் பவானி கோட்டத்தில் பதிவான 17 வழக்குகளில், இருபது லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கார்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள், 2 கைபேசிகள், 71 பவுன் தங்க நகைகள் ஆகியவைகளும், கோபி கோட்டத்திற்குட்பட்ட 16 வழக்கு களில் ஐந்து லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள், ஒரு மடிக்கணினி, 46 பவுன் தங்க நகைகள் ஆகியவைகளும், சத்தியமங்கலம் கோட்டத்தில் 10 வழக்கு களில் 6 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு கைபேசி, ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் பணம், 19 பவுன் தங்க நகைகள் ஆகியவைகளும், ஈரோடு ஊரக கோட்டத்தில் 13 வழக்கு களில் 79 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள மூன்று லாரிகள், ஒரு கார், 36 கைபேசிகள், 75 பவுன் தங்க நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று ஈரோடு 46 புதூர் ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்றது. கோவை சரகத்தின், காவல்துறை துணைத்தலைவர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா கலந்துகொண்டு பொருட்களை உரியவர்களிடம் வழங்கினார்.