tamilnadu

img

ரயில்வேயின் தொழிற்சங்க தேர்தலை நடத்திடுக

ஈரோடு, ஆக.10- ரயில்வேயின் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் டிஆர்இயு ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வேயின் தொழிற்சங்க அங்கீகாரத்திற் கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தை விதி முறைகள் இறுதிப்படுத்தப்படாத நிலையில், தேர்தல் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 28,29 ஆகிய தேதிகளில் நடத்த இயலாது. ஆகவே, தேர்தல் தேதி பின்னர் அறி விக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள் ளதை கண்டித்தும், இது பாஜகவின் சங்கத்திற்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்குவதற்கு மறைமுக திட்டமிடுவதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என டிஆர்இயு (சிஐடியு) சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்ட உதவித் தலைவர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். டிவிசினால் செயலாளர் கே.அல்லிமுத்து, ஜோனல் உதவித் தலைவர் எஸ்.சாம்பசிவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மண்டல உதவிச் செயலாளர் சி.முருகேசன், கோட்ட பொரு ளாளர் எம்.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.