கோவை, நவ. 4- தில்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து திங்களன்று கோவை வழக் கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக் கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த நவ.3 ஆம் தேதியன்று தில்லி யில் நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஒரு வருக்கும் காவலர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து காவல்துறையினரின் தடி யடியில் பலர் காயமடைந்தனர். வழக்கறி ஞர்கள் மீது காவல்துறையினர் தாக்கு தல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை வழக் கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தில்லி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட தில்லி காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர் கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக வழக்கறிஞர்கள் திங்க ளன்று நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக் கையில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது.