tamilnadu

img

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோருக்கு பாராட்டு

இளம்பிள்ளை, ஆக. 19 - கொரோனா தொற்று வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவி ரமாக ஈடுபட்ட மகுடஞ்சாவடி வட்டார சுகாதார அலுவலர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா வாரியர் பட்டம் வழங்கப் பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரப் பகுதியில் கொரோனா தொற்று வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டமைக்கு சேலத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுசீந்தி ரன், மருத்துவர், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர், கிராம சுகாதார செவிலியர், பகுதி நேர சுகாதார செவிலியர், கணினிப் பணியாளர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா வாரியர் பட்டமும், நற்சான்றிதழ்க ளும் சேலம் மாவட்ட ஆட்சியரால் வழங்கி கௌரவிக்கப் பட்டது.