tamilnadu

வணிக நிறுவனங்களுக்கு காவல்துறை இடையூறு வியாபாரிகள் சங்கம் காவல் ஆணையரிடம் புகார்

கோவை, ஜூலை 3-  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை கள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதித்து அரசாணை வெளியிட்டும், கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மத்திய அரசின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும்  பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேர மும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், கோவை மாநகர காவல் எல்லைக்கு உட் பட்ட பகுதிகளான காந்திபுரம், ரயில் நிலை யம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காவல் துறையினர் கடைகள் 24 மணி நேரம் திறக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து புதனன்று கோவை மாநகர வியாபாரிகள் சம்மேளனத்தினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத் தில் புகார் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாநகர சட்டம் ஒழுங்கு  காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், சம்பந்தப்பட்ட காவல் அதி காரிகளுக்கு வியாபாரிகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.