பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஆர்ப்பாட்டம்
கோவை, நவ. 28 – பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வியாழனன்று பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது. மேலும், மத்திய அரசு இத்தகைய முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதன் ஒருபகுதியாக கோவையில் சிஐடியு தலைமையில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 24 மணி நேரம் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பாரத் பெட் ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலா ளர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், பீளமேடு பாரத் பெட்ரோலிய நிறுவ னத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங் கினார். இப்போராட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.மனேகரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜசேகர், துணை தலைவர் டெம்போ ரபீக், பிபிசி சிஐடியு கிளை செயலாளர் பரமசிவம், தலைவர் ஆர்.முத்துசாமி, சி.பாலசுப்பிரமணி, ஏ.வேலுசாமி ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.